பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படவேண்டிய முதன்மை மற்றும் திருத்தச் சட்டவாக்கங்கள் சட்டவரைஞர் திணைக்களத்தினால் வரையப்படுவதனையும் துணைநிலைச் சட்டவாக்கங்கள் மீளாயப்படுவதனையும் கோருவதில் அமைச்சுக்களினாலும் திணைக்களங்களினாலும் கடைப்பிடிக்கப்பட்ட நடவடிக்கைமுறை.
1. சட்டமூலமொன்று தயாரிக்கப்படுவதற்காக இயைபான அமைச்சுக்கான செயலாளரினால் சட்டவரைஞருக்கான கோரிக்கையொன்று எழுத்திலிருத்தலும் பின்வரும் ஆவணங்களுடன் சேர்த்தனுப்பப்படுதலும் வேண்டும்:-
- உத்தேசிக்கப்பட்ட சட்டவாக்கம் எந்தக் கொள்கையின் அடிப்படையிலிருத்தல் வேண்டுமோ அந்தக் கொள்கையை எடுத்துக்கூறுகின்றதும் அத்தகைய சட்டவாக்கத்தை வரைவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்தை நாடுகின்றதுமான அமைச்சரவை நிருபம்
- நிருபம் தொடர்பாக அமைச்சரவை முடிபு அத்துடன்
- சட்டவாக்கம் வரையப்படுவதனை வசதிப்படுத்தும் தகவலைக்கொண்டுள்ள வேறு இயைபான ஆவணங்கள்.
2.அதன்மேல் சட்டவரைஞர், உத்தேசிக்கப்பட்ட சட்டவாக்கத்தின் முதனிலை வரைவுச் சட்டமூலத்தை (ஆங்கிலத்தில்) தயாரிப்பாரென்பதுடன், இவ்வரைவுச் சட்டமூலம் கோரிக்கை விடுக்கின்ற அமைச்சுக்கு அதன் அவதானிப்புகளுக்காக அனுப்பிவைக்கவும்படும்.
3.முதனிலை வரைவுச் சட்டமூலம் அமைச்சரவையினால் முடிபுசெய்யப்பட்ட கொள்கைக்கு இசைந்தொழுகவுள்ளதெனக் கோரிக்கைவிடுக்கின்ற அமைச்சிடமிருந்தான இறுதி உறுதிப்படுத்துகையின்மேல்இ சட்டவரைஞர்இ இயைபான சட்டமூலத்தின் இறுதி வரைவொன்றைக் கோரிக்கைவிடுக்கும் அமைச்சுக்கும் சட்டத்துறைத் தலைமையதிபதிக்கான அதன் பிரதியொன்றையும் அனுப்பிவைப்பார்.
4. அதன்மேல் சட்டத்துறைத் தலைமையதிபதிஇ அரசியலமைப்பின் 77 ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளைப் பின்பற்றி வரைவுச் சட்டமூலத்தின் அரசியலமைப்புக்கிசைவாந்தன்மை பற்றிய அவதானிப்புகளைச் செய்வாரென்பதுடன், வரைவுச் சட்டமூலத்தின் ஏற்பாடுகள் அவரது அபிப்பிராயத்தில் -
- அரசியலமைப்பின் ஏற்பாடுகளை மீறாதவிடத்து, சட்டத்துறைத் தலைமையதிபதி, கோரிக்கைவிடுக்கின்ற அமைச்சுக்கு அப்பொருள்பட்ட சான்றிதழையும் சட்டவரைஞருக்கான அதன் பிரதியொன்றையும் வழங்குவார் அல்லது,
- அரசியலமைப்பின் ஏதேனும் ஏற்பாட்டை மீறுமிடத்து, சட்டத்துறைத் தலைமையதிபதி, சட்டமூலத்தின் சட்டவரைஞருக்கான பிரதியொன்றுடன், கோரிக்கைவிடுக்கின்ற அமைச்சுக்கு அதற்கிணங்க அவரது அவதானிப்புகளைச் செய்வார். வரைவுச் சட்டமூலத்துக்கு அத்தகைய திருத்தங்கள் செய்யப்படுவதன்மேல், சட்டத்துறைத் தலைமையதிபதி, ஏற்பாடுகளானவை அரசியலமைப்பின் ஏதேனும் ஏற்பாட்டை மீறுவனவல்ல என்ற பொருள்பட்ட சான்றிதழொன்றையும் வழங்குவார்.
5. சட்டத்துறைத் தலைமையதிபதியின் சான்றிதழைப் பெற்றதன்மேல், சட்டவரைஞர், அப்போது, சட்டமூலத்தின் சிங்கள, தமிழ் வரைவுகளைக் கோரிக்கைவிடுக்கின்ற அமைச்சுக்கு அனுப்பிவைப்பார். திருத்தச் சட்டவாக்கத்தின் விடயத்தில் மும்மொழிகளிலுமுள்ள சட்டப்பயன் பற்றிய கூற்றும் அக்கட்டத்தில் அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்படும்.
6. கோரிக்கைவிடுக்கின்ற அமைச்சு, அப்போது, வரைவுச் சட்டமூலத்தை மும்மொழிகளிலும் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்குமென்பதுடன், வரைவுச் சட்டமூலம் வர்த்தமானியின் பாகம் II இல் வெளியிடப்படுவதற்கும் அதனைப் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்குமான அங்கீகாரத்தையும் நாடும். வரைவுச் சட்டமூலத்துக்கு மேற்கொண்ட திருத்தங்கள் செய்வது தேவையாகவுள்ளதென அமைச்சரவை இக்கட்டத்தில் முடிவுசெய்தால், அப்போது, அமைச்சு, இயைபான அமைச்சரவை முடிவை, மும்மொழிகளிலும் வரைவின் பிரதிகளுடனும் சட்டப்பயன் பற்றிய கூற்று ஏதேனுமிருப்பின் அதனுடனும்சேர்த்து, வரைவில் இயைபான திருத்தங்கள் சேர்க்கப்படுவதற்காகச் சட்டவரைஞருக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
7. பந்தி 6 இல் எதிர்நோக்கப்பட்ட நிலைமை எழுந்தால், அப்போது, பந்திகள் 3, 4 மற்றும் 5 என்பவற்றில் தரப்பட்டுள்ள நடவடிக்கைமுறை, அப்போது மீண்டும் பின்பற்றப்படுதல் வேண்டும்.
8. சட்டமூலமானது அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படுவதனை அமைச்சரவை அங்கீகரித்ததும், அமைச்சானது, வரைவை மும்மொழிகளிலும் அரசாங்க அச்சகருக்கு அனுப்பிவைத்தல் வேண்டும். வரைவுச் சட்டமூலமானது முதலில் அரசாங்க வர்த்தமானிக்கான குறைநிரப்பியாக வெளியிடப்படுகின்றதுடன், மும்மொழிகளிலும் அச்சிடப்பட்டபோது, அச்சுப்பிரதிகள், இறுதி ஒப்புநோக்குதலுக்காகவும் அங்கீகாரத்துக்காகவும் சட்டவரைஞருக்கு அச்சகரினால் அனுப்பிவைக்கப்படும்.
9. வரைவுச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும், அரசியலமைப்பின் நியதிகளின்படி, வெளியீட்டுத் திகதியிலிருந்து 14 நாட்கள் முடிவுற்றபின்னர் மட்டுமே அது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுதல் வேண்டும். முன்வைப்புக்குப்பின்னர் (முதலாவது வாசிப்பு) அதனை ஒரு சட்டமூலம் என்ற வடிவத்தில் அச்சிடும்படி பாராளுமன்றமானது பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகத்தைப் பணிக்கின்றதுடன், இலக்கமொன்றும் கொடுக்கப்படுகின்றது. அட்டைப் பக்கத்தின் தோற்றத்திலான மாற்றம் மட்டுமே இடம்பெறுவதுடன், வரைவின் உள்ளீட்டுக்கு மாற்றமெதுவும் செய்யப்படுவதில்லை.
10. சட்டமூலமொன்று ஒழுங்குப்பத்திரத்தில் இடப்பட்டதும், இரண்டாவது வாசிப்பு விவாதத்துக்கான திகதியொன்று (அது முன்வைக்கப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு முன்னதாகவிராதவொரு நாளன்று) நிர்ணயிக்கப்படுகின்றது. எவரேனும் பிரசை உயர்நீதிமன்றத்தில் சட்டத்தை எதிர்ப்பதற்காக அத்தகைய காலப்பகுதி கொடுக்கப்படுகின்றது. இரண்டாவது வாசிப்புக்குப்பின்னர் இடம்பெறுகின்ற சட்டமூலத்தின் குழுநிலையில், விவாதிக்கப்படுகின்ற விடயங்கள் சம்பந்தமாக எழுகின்ற ஏதேனும் மாற்றம் குழுநிலைத் திருத்தங்கள் என்றவகையாகச் செய்யப்படலாம். அமைச்சரவையினால் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைக்குப் புறம்பான புதிய விடயமெதுவும் குழுநிலைத் திருத்தங்கள் என்றவகையாக உள்ளடக்கப்படுதலாகாது.